Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில்காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ராஜூவ்காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகுமார் தலைமை வகித்து, மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள ராஜூவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முன்களப்பணியாளர்களுக்கு எம்எல்ஏ ராஜகுமார் முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார்.